செய்திகள்
ஜிகே வாசன்

எதிர்க்கட்சி லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- ஜி.கே.வாசன்

Published On 2020-12-02 03:59 GMT   |   Update On 2020-12-02 03:59 GMT
எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 7-வது நாளை எட்டுகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. நாளை அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது.

குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை திசை திருப்ப கூடாது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தால் அப்பாவி விவசாயிகள் பலியாகக்கூடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News