உள்ளூர் செய்திகள்
ஏட்டுவின் மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-05-06 10:18 GMT   |   Update On 2022-05-06 10:18 GMT
போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே, அதுவும் போலீஸ் காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை காவல் நிலைய வளாகம் அருகே நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றதை அறிந்த ஏட்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தார்.

அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்று பிரதான சாலைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த அவரது நண்பர் அந்த வாகனத்தை தனது காலால் தள்ளி சென்று இயக்க உதவியுள்ளார்.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தென்காசி சாலையில் வேகமாக சென்று உள்ளனர். இதையடுத்து அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் அந்த நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே, அதுவும் போலீஸ் காரரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News