செய்திகள்
எம்எஸ் டோனி

ஆசிய லெவன் அணிக்காக டோனி ஆடுவாரா?

Published On 2019-11-27 05:20 GMT   |   Update On 2019-11-27 05:20 GMT
ஆசிய லெவன் - உலக லெவன் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எம்எஸ் டோனி களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 18 மற்றும் 21-ந் தேதிகளில் டாக்காவில் நடக்கிறது.

இந்த போட்டியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான ஆசிய லெவன் அணிக்காக விளையாட இந்திய வீரர்கள் டோனி, விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு, வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இதனால் ஆசிய லெவன் அணிக்காக டோனி களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News