செய்திகள்
தற்கொலை

தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை

Published On 2019-10-08 09:23 GMT   |   Update On 2019-10-08 09:23 GMT
தேனி அருகே குடும்ப பிரச்சினையில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் கூடலூர் குள்ளப்பகவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் பிரவீனா (வயது26). என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜேஷ் வேன் டிரைவராக உள்ளார். வீட்டு செலவுக்கு சரிவர பணம் தராததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரவீனா தனது கணவரை கடுமையாக தாக்கினார். காயம் அடைந்த ராஜேஷ் கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பிரவீனா தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

போடி ஜமீன் மேனேஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (62). சமையல் வேலை பார்த்து வந்தார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News