செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2021-09-25 14:57 GMT   |   Update On 2021-09-25 14:57 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:

பாலமேடுவை சேர்ந்தவர் சீனிகுமார் (வயது 43). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் சைலன்சர் பட்டு படுகாயம் அடைந்தார். இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News