செய்திகள்
கொரோனா வெற்று உரைகள் வேண்டாம், நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் - ராகுல்காந்தி
எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கோவிட்-19 நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பிற்குள்ளாகி தனிமைப்படுத்தலில் உள்ள ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவீட்டில்,
"கொரோனா பாதிப்புக்குள்ளாகி நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன், நாட்டில் கொரோனா நெருக்கடி குறித்து சோகமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி என்பது கொரோனாவால் மட்டுமல்ல , மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளினாலும் ஏற்படுகிறது . எங்களுக்கு தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் வேண்டாம் , நாட்டுக்கு ஒரு தீர்வு கொடுங்கள் என டுவீட் செய்துள்ளார்.