இந்தியா
விவசாயிகள் போராட்டம்

அதிகாரத்தின் ஆணவம் தோல்வி அடைந்திருக்கிறது - மத்திய அரசுமீது காங்கிரஸ் தாக்கு

Published On 2021-12-09 23:57 GMT   |   Update On 2021-12-09 23:57 GMT
விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், அவர்களது துயரம் தொடரும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக நடந்த இந்தப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது உண்மையின் வெற்றி. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் தியாகம் எப்போதும் நினைவு கூரப்படும் என பதிவிட்டிருந்தார்.

இதுபோல, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, விவசாயிகளின் மன உறுதி வென்று இருக்கிறது, அதிகாரத்தின் ஆணவம் தோல்வி அடைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News