செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- வாலிபர் பலி
தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கண்டாச்சிமங்கலம்:
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சேரன் மகன் பச்சையப்பன் (வயது 19). இவர் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த பச்சையப்பன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சிறுவங்கூர் நோக்கி புறப்பட்டார்.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சேரன் மகன் பச்சையப்பன் (வயது 19). இவர் சென்னையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த பச்சையப்பன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சிறுவங்கூர் நோக்கி புறப்பட்டார்.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தாய் கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.