செய்திகள்
திமுக

நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு- வேலூர் மேற்கு மாவட்ட திமுக அறிவிப்பு

Published On 2019-08-17 07:16 GMT   |   Update On 2019-08-17 07:16 GMT
தொடர் மழையின் காரணமாக வேலூரில் நாளை நடைபெற இருந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

சென்னை:

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்த தொகுதியின் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வாணியம்பாடியில் நாளை (18-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொதுக்கூட்டம் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி வாணியம்பாடியில் மாலை 4 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்று வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. அறிவித்துள்ளது.

Tags:    

Similar News