செய்திகள்
பீகார் தேர்தல் - நவம்பர் 3ம் தேதி கிஷண்கஞ்ச், அராரியா பகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம்
பீகார் சட்டசபை தேர்தலுக்காக கிஷண்கஞ்ச் மற்றும் அராரியா பகுதிகளில் நவம்பர் 3-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடைபெறும் மூன்று கட்டத் தேர்தல்களில் 71 சட்டமன்றத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 28ம் தேதி நடைபெற்றது.
கடுமையான பாதுகாப்பு மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல் கட்ட வாக்குப்பதிவில் 54 சதவீதம் வாக்கள் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்காக கிஷண்கஞ்ச் மற்றும் அராரியா பகுதிகளில் நவம்பர் 3-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.