ஆன்மிகம்
சித்தூரில் நவராத்திரி உற்சவம்: அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு காசி விசாலாட்சி அலங்காரம்
சித்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சாகம்பரி அலங்காரம், இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூரில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. சித்தூர் பெஸ்த தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், சாகம்பரி அலங்காரம், இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணை அலங்காரத்தில் கேரளா மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது.
நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், சாகம்பரி அலங்காரம், இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணை அலங்காரத்தில் கேரளா மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது.