ஆன்மிகம்
ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்

கூடலழகர் கோவில் ஆடிப்பூரம்: ஆண்டாள் மடியில் சயன திருக்கோலத்தில் காட்சியளித்த சுந்தரராஜப் பெருமாள்

Published On 2021-08-09 09:02 GMT   |   Update On 2021-08-09 09:02 GMT
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர திருவிழாவில் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான 4-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

ஆடிப்பூரத் திருவிழாவின் 6-ம் நாளான 7-ம்தேதி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார்.

ஆடிப்பூர திருவிழாவில் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் மடியில் வியூக சுந்தரராஜப் பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார். இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News