செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்- பெண் சாவு

Published On 2018-09-05 11:51 GMT   |   Update On 2018-09-05 11:51 GMT
கந்தர்வக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:

கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வலவம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுபா. உடல்நிலை சரியில்லாத சுபாவை, ரமேஷ் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுபா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தஞ்சாவூர் பழைய அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் கந்தர்வக்கோட்டையில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அடைக்கன் குளம் பகுதியில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News