செய்திகள்
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது
சிங்கம்புணரி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிங்கம்புணரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில்வைரமுத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனக்கு இரண்டு தடவை கருவை கலைத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து, அவரது நண்பர் சித்திரைகுமார்(21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரமுத்துவை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில்வைரமுத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனக்கு இரண்டு தடவை கருவை கலைத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து, அவரது நண்பர் சித்திரைகுமார்(21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரமுத்துவை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.