செய்திகள்
கோத்தகிரி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
கல்லூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பாலனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி ஜக்கனாரை அருகே உள்ள ஆடுபெட்டு கல்லூரைச் சேர்ந்தவர் பாலன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் கல்லூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பாலனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அங்கு கிடந்த கட்டையை எடுத்து பாலனை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலனை தாக்கிய அரவேனு பகுதியை சேர்ந்த மதன் (24), குஞ்சப்பனையை சேர்ந்த மூர்த்தி (33) ஆகியோரை கைது செய்தனர்.
கோத்தகிரி ஜக்கனாரை அருகே உள்ள ஆடுபெட்டு கல்லூரைச் சேர்ந்தவர் பாலன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் கல்லூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பாலனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அங்கு கிடந்த கட்டையை எடுத்து பாலனை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலனை தாக்கிய அரவேனு பகுதியை சேர்ந்த மதன் (24), குஞ்சப்பனையை சேர்ந்த மூர்த்தி (33) ஆகியோரை கைது செய்தனர்.