செய்திகள்
கொரோனா வைரஸ்

குருவாயூர் கோவிலில் 36 யானை பாகன்களுக்கு கொரோனா

Published On 2021-04-29 08:35 GMT   |   Update On 2021-04-29 08:35 GMT
குருவாயூர் கோவில் யானை பாகன்கள் 36 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா நோய் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இங்குள்ள கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பாகன்கள் இருப்பார்கள். பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் பணியாற்றும் பாகன்களில் 6 பேருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அங்குள்ள மற்ற பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் மேலும் 30 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.



இதையடுத்து குருவாயூர் யானை பாகன்கள் 36 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News