செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 29 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 371 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 269 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28,040 ஆகும்.