குரும்பூர்-திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
குரும்பூர்:
குரும்பூர் பகுதியில் தீபாவளி தினத்தையொட்டி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து வாகன தணிக்கை ஈடுபட்டனர்.
அப்போது மேலஆத்தூரை சேர்ந்த கலைசெல்வன் (வயது 38), ஜெயகொடி (60) ஆகியோர் ஒரு சாக்குபையில் 189 மது பாட்டில்களை கடத்தி சென்றதை கண்டறிந்து மதுபாட்டிகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் குரும்பூர் பரதர் தெருவை சேர்ந்த ஜோயல் சேவியர் (69) என்பவர் மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 மது பாட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
நாலுமூலைக்கிணறு பகுதியில் திருச்செந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படி ஒருவர் நின்ற கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அனுமதி இல்லாமல் மது பாட்டிலை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்ததும், மேலும் அவர் சீர்காட்சி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.