செய்திகள்
கோப்புப்படம்

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது

Published On 2020-09-13 22:32 GMT   |   Update On 2020-09-13 22:32 GMT
சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு 0.8 சதவீதம் குறைந்தது
சென்னை:

சென்னையில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் மணலி மண்டலத்தில் 8 சதவீதமும், பெருங்குடி மண்டலத்தில் 4.1 சதவீதமும், அண்ணாநகர் மண்டலத்தில் 2.9 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், ராயபுரம் மண்டலத்தில் 0.9 சதவீதமும் குறைந்துள்ளது.

அம்பத்தூர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் தலா 0.6 சதவீதமும், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலத்தில் தலா 0.5 சதவீதமும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 0.8 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் அடையாறு மண்டலத்தில் 0.3 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.5 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1.5 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.9 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News