செய்திகள்
வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு

Published On 2021-05-15 11:47 GMT   |   Update On 2021-05-15 11:47 GMT
ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் சென்றதாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாகவும் 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News