செய்திகள்
மின்சாரம் தாக்குதல் (கோப்புப்படம்)

கோவையில் மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2019-12-03 10:50 GMT   |   Update On 2019-12-03 10:50 GMT
கோவையில் மின்சாரம் தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை போளுவாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 53). இவர் அந்த பகுதியில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார்.

சம்பவத்தன்று கண்ணம்மாள் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னம் பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கோமதி (வயது 52). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சீலையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் அலறித்துடித்த கோமதியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 48). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமுகை ஜடையம்பாளையம் வழியாக வீட்டுக்கு சென்றார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் கருப்பசாமி பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News