செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கை மீறி திரிந்ததாக ஒரே நாளில் 320 வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-06-06 18:24 GMT   |   Update On 2021-06-06 18:24 GMT
அரசின் தடை உத்தரவை மீறி முககவசம் அணியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி முககவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஊரடங்கை மீறி திரிந்த 316 இருச்சக்கர வாகனங்கள், 2 ஆட்டோ மற்றும் 2 கார்கள் என மொத்தம் 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்
Tags:    

Similar News