செய்திகள்
தற்கொலை

சுசீந்திரம் அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

Published On 2021-10-26 10:00 GMT   |   Update On 2021-10-26 10:00 GMT
சுசீந்திரம் அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே கடைத்தெருவில் வசித்து வருபவர் சண்முகவேல். இவரின் மகன் சரவணன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் சரவணன் கடந்த 9 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சுசீந்திரம் கோவில் மற்றும் சில பகுதிகளில் பழங்கள் மற்றும் நெல்லிக்காய் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார். பல நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட சரவணன் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூங்க சென்றார். ஆனால் அடுத்தநாள் மாலை வரை அவர் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. மேலும் அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு சரவணன் தனது வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News