செய்திகள்
கொரோனா வைரஸ்

உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-15 11:08 GMT   |   Update On 2021-05-15 11:08 GMT
உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உத்திரமேரூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மடம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சிலர் புதுச்சேரியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து மடம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

அப்போது அவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News