வழிபாடு
விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2021-12-23 03:53 GMT   |   Update On 2021-12-23 03:53 GMT
நாகை மாவட்ட பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் வாய்மேட்டில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தியையொட்டி வல்லப கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பால், இளநீர், சந்தனம், நெய், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களால் வல்லப கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், கற்பகவிநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார் கோவில் குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவில் விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்ததி வழிபாடு நடந்தது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம் நடைபெற்றது.
Tags:    

Similar News