செய்திகள்
மின்தடை

கன்னியகோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-03-30 15:06 GMT   |   Update On 2021-03-30 15:06 GMT
கன்னியகோவில் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பாகூர்:

பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் நாளை (புதன்கிழமை) சில பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கன்னியகோவில், புதுநகர், முள்ளோடை, மதிகிரு‌‌ஷ்ணாபுரம், உச்சிமேடு, கல்லியான்குப்பம், கொரவள்ளிமேடு, ஆராய்ச்சிகுப்பம், கொமந்தான்மேடு, குருவிநத்தம், சோரியாங்குப்பம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

மேற்கண்ட தகவலை மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News