செய்திகள்
பூந்தமல்லி அருகே மேம்பாலத்தில் ஏறி நின்று தீக்குளித்து வாலிபர் தற்கொலை
சத்திய நாராயணன் குடும்பத்தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் சத்தியநாராயணன் (வயது 26). வடபழனியில் உள்ள ராகவேந்திரர் மடத்தில் சமையல்காரராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சத்தியநாராயணன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி அடுத்த காவல்சேரியில் உள்ள வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் இருக்கும் மேம்பாலத்திற்கு வந்தார்.
திடீரென அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை கேனில் பிடித்தார். பின்னர் அவர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகிய சத்தியநாராயணன் அலறி துடித்தபடி எரியும் தீயுடன் சுமார் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து உயிருக்கு போராடிய சத்தியநாராயணனை மீட்டு திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே சத்தியநாராயணன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்த சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது தம்பிக்கு திருமணம் ஆகிவிட்டது. சத்திய நாராயணனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
இதையடுத்து சத்திய நாராயணன் திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மேம்பாலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
குடும்பத்தகராறில் சத்திய நாராயணன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். சத்திய நாராயணன் அதிகாலையில் தீக்குளித்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தபோது அதிக அளவில் வாகனங்கள் செல்லவில்லை. இதனால் அவர் கீழே குதித்த சிறிது நேரத்திற்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு இது பற்றி தெரிய வந்தது.
மேம்பாலத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் சத்தியநாராயணன் (வயது 26). வடபழனியில் உள்ள ராகவேந்திரர் மடத்தில் சமையல்காரராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சத்தியநாராயணன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி அடுத்த காவல்சேரியில் உள்ள வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் இருக்கும் மேம்பாலத்திற்கு வந்தார்.
திடீரென அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை கேனில் பிடித்தார். பின்னர் அவர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் உடல் கருகிய சத்தியநாராயணன் அலறி துடித்தபடி எரியும் தீயுடன் சுமார் 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து உயிருக்கு போராடிய சத்தியநாராயணனை மீட்டு திருவள்ளூவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே சத்தியநாராயணன் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்த சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது தம்பிக்கு திருமணம் ஆகிவிட்டது. சத்திய நாராயணனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
இதையடுத்து சத்திய நாராயணன் திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மேம்பாலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கிறார்.
குடும்பத்தகராறில் சத்திய நாராயணன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். சத்திய நாராயணன் அதிகாலையில் தீக்குளித்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தபோது அதிக அளவில் வாகனங்கள் செல்லவில்லை. இதனால் அவர் கீழே குதித்த சிறிது நேரத்திற்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு இது பற்றி தெரிய வந்தது.
மேம்பாலத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.