செய்திகள்
விவசாயிகளுக்கு மானியத்தில் சோலார் மின்வேலி
விவசாயிகளுக்கு மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவிநாசி:
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் சோலார் மின்வேலி வழங்கப்படவுள்ளது.அதன்படி சோலார் மின்வேலி அமைக்க ரூ.2.18 லட்சம் அல்லது மொத்த செலவின தொகையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள், நில உரிமையாளர்கள், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல், தோட்டத்தின் வரைபடம் ஆகியவற்றுடன் அவிநாசி உதவி வேளாண் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 63692 08084 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.