செய்திகள்
ரோகித் சர்மா, கேஎல் ராகுல்

ஐ.பி.எல்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு

Published On 2021-09-28 14:09 GMT   |   Update On 2021-09-28 14:09 GMT
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அகர்வால் நீக்கப்பட்டு மந்தீப் சேர்க்கப்பட்டார்.
அபுதாபி:

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கே.எல்.ராகுல்  தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் பெற்றுள்ளன.ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் முடிவு முக்கியமானதாக அமையும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அகர்வால் நீக்கப்பட்டு மந்தீப் சேர்க்கப்பட்டார்.

மும்பை அணியில் மாற்றங்களாக இஷான் கிசன், மில்னே வுக்கு பதிலாக திவாரி மற்றும் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டனர்.
Tags:    

Similar News