செய்திகள்
உ.பி.யில் துணிகரம் - பாஜக எம்.எல்.ஏ. வீட்டில் மர்ம நபர்கள் கையெறி குண்டு தாக்குதல்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை பாஜக எம்.எல்.ஏ. வீட்டிம் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #MLAHouseAttack
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சர்தானா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சங்கீத் சாம். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் வெடிகுண்டு வீசி கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை அவர் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை சங்கீத் சாம் வீட்டின் அருகில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சங்கீத் வீட்டில் இருந்த பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த கையெறி குண்டுகளையும் வீசினர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக எம்.எல்.ஏ. வீட்டின் மீது துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் அதிகாலையில் நடத்தப்பட்டது உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BJP #MLAHouseAttack