உள்ளூர் செய்திகள்
புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-04-15 10:09 GMT   |   Update On 2022-04-15 10:09 GMT
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு:

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு, 40 நாட்கள் உபவாசம் இருந்துள்ளார்.

இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்வர். ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த விரதம் நிறைவு பெறும்.

அதேபோல் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் கிறிஸ்தவர்கள் விரதம் மேற்கொள்ள தொடங்கினர்.  நேற்று புனித வியாழன் அனுசரிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.  ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தையும், ஈரோடு மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 

இயேசு சிலுவை பாதை தியாகங்களை போற்றும் வகையில் 14 ஸ்தலங்களாக சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இந்த சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர்தெழுந்த நாளான வரும் 17-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

புனித அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
Tags:    

Similar News