செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தார்.
விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பதுதெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பாலத்தின் அருகே கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னேரி சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை கைது செய்தார்.
விசாரணையில் அவர் பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நாகராஜ் (32) என்பதுதெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்