செய்திகள்
மரணம்

திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலி

Published On 2021-09-09 11:15 GMT   |   Update On 2021-09-09 11:15 GMT
திருப்பத்தூர் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே புதுப்பேட்டை செல்லும் சாலையில் தரை ரெயில்வே பாலம் உள்ளது. 75 வயது மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூதாட்டி மீது மோதியது. சம்பவ இடத்திலேயே மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News