செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2020-09-25 17:13 GMT   |   Update On 2020-09-25 17:13 GMT
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நம்பியார் (வயது 41). விவசாயி. இவர் ராகவரெட்டிமேடு கிராமத்தில் சொந்தமாக புது வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நம்பியார், தனது புது வீட்டுக்கு வழக்கம் போல் சென்று பார்த்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 3 வெல்டிங் எந்திரங்கள், ஒரு துளை போடும் கருவி மற்றும் 5 வயர் பண்டல்கள் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News