செய்திகள்
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றமாக காணப்படும்: வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி கரையை நடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் சீற்றமாக காணப்படும் என வானிமை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை கடல் அலைகள் 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் உயர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.