வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன்

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிப்பு

Published On 2021-12-30 08:22 GMT   |   Update On 2021-12-30 08:22 GMT
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படுகிறது.
அறுபடைவீடுகளில் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோல நாளை மறுநாள் 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நாளில் வழக்கம்போல கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இதேபோல கருவறையில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.

மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News