உள்ளூர் செய்திகள்
.

சேலம் அம்மாப்பேட்டையில் 8 மோட்டார் சைக்கிள்கள், 7 சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசம்

Published On 2022-04-15 10:05 GMT   |   Update On 2022-04-15 10:05 GMT
சேலம் அம்மாப்பேட்டையில் 8 மோட்டார் சைக்கிள்கள், 7 சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை குலாளர் தெருவில் ராமசாமி என்பவருக்கு சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில்  14 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் வாகனங்களை நிறுத்த கீழ் பகுதியில் ஒரு வாகனங்கள் நிறுத்தும்  செட் உள்ளது. 

இந்த செட்டில் வழக்கம் போல 8 மோட்டார் சைக்கிள்கள், 7 சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில்  நேற்றிரவு 12 மணியளவில்  இந்த  வாக-னங்கள் அடுத்தடுத்து  தீப்பிடித்து எரிந்தன.

இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்  தீயை அணைக்க முயன்றனர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள்  அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி  தண்ணீரை பீய்ச்சி அடித்து அக்கம், பக்கம் தீ பரவாமல் தடுத்து  தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் 8 மோட்டார் சைக்கிளும், 7 சைக்கிள்களும் எரிந்து நாச-மானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஏதாவது சதி செயல் உள்ளதா?, அல்லது தானாக தீப்பிடித்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News