செய்திகள்
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்

‘ஜீவன் ரக்‌ஷா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

Published On 2021-07-31 13:11 GMT   |   Update On 2021-07-31 13:11 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ‘ஜீவன் ரக்‌ஷா’ பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:

இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாறுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு இந்திய அரசின் ‘ஜீவன் ரக்‌ஷா’ பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சர்வோத்தம் ‘ஜீவன் ரக்‌ஷா’ பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ‘உத்தம் ஜீவன் ரக்‌ஷா’ பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ‘ஜீவன் ரக்‌ஷா’ பதக்கம் தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்‌ஷா’ பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தள முகவரி www.sdat.tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை நாளை மறுநாளுக்குள் (திங்கட் கிழமை) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இந்த விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 7401703485 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News