செய்திகள்
தற்கொலை

வள்ளியூர் அருகே விவசாயி தற்கொலை

Published On 2021-04-10 09:59 GMT   |   Update On 2021-04-10 09:59 GMT
வள்ளியூர் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

வள்ளியூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னையா (வயது 55), விவசாயி. இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு காலில் உள்ள புண் ஆறாமல் அவதிப்பபட்டார். இதில் மனம் உடைந்த பொன்னையா வி‌ஷம் குடித்தார். அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News