செய்திகள்
அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

காலிங்கராயன் பாசனப்பகுதியில் அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

Published On 2020-11-21 07:16 GMT   |   Update On 2020-11-21 07:16 GMT
காலிங்கராயன் பாசனப்பகுதியில் முற்றிய நெல்மணிகள் தலைசாய்ந்து தரையைப்பார்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடைக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப்பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப்பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கர் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப்பகுதிகளில் ஆண்டுக்கு 10½ மாதங்கள் தண்ணீர் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.

அதன்படி தற்போது காலிங்கராயன் பாசன பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வயல்களில் பயிர் செய்யப்பட்டு உள்ள நெல் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. முற்றிய நெல்மணிகள் தலைசாய்ந்து தரையைப்பார்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடைக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News