செய்திகள்
கொரோனா வைரஸ்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-11-22 09:54 GMT   |   Update On 2021-11-22 09:54 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53,083 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,041 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 83 அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,170 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 408 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News