செய்திகள்
கைது

அரக்கோணம் அருகே மதுபானம் விற்றவர் கைது

Published On 2021-06-06 10:45 GMT   |   Update On 2021-06-06 10:45 GMT
அரக்கோணம் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். இவர் ஆந்திராவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து திருமாதலம்பாக்கம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில் விற்பதாக தக்கோலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். சவுக்குத் தோப்பில் வரதன் ஆந்திர மதுபாட்டில்களை விற்றது தெரிய வந்தது. இதையடுத்து வரதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News