செய்திகள்
மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை
புதுவை லாஸ்பேட்டையில் மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன் ( வயது 52). அரசு ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் இறந்து விட்டார். அதுமுதல் ரகுராமன் துக்கத்தில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். குடிப்பழக்கமும் இருந்ததால் குடித்துவிட்டு விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.