இந்தியா
விபத்து பலி

மராட்டியத்தில் கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

Published On 2022-05-07 05:33 GMT   |   Update On 2022-05-07 05:33 GMT
விகிர்கான் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

நாக்பூர்:

மாராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து உம்ராட்டுக்கு நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. விகிர்கான் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News