உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் சாவு

Published On 2022-04-16 10:02 GMT   |   Update On 2022-04-16 10:02 GMT
கல்குவாரி குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த நந்தியலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேலன். 

அவரது மகன்கள் பாபு (வயது 19), பரத் (17), பாஸ்கரன் (15). அண்ணன்&தம்பிகள் 3 பேரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றனர்.

அப்போது பாபு கால்தவறி குட்டையில் விழுந்துள்ளார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபதாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரத்தினகிரி போலீசார் மற்றும் ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் இருந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News