செய்திகள்
செய்யாறு அருகே மகள் காதல் திருமணம் - தாய் தற்கொலை
செய்யாறு அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகள் மகாலட்சுமி (வயது 22). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமியின் தாய் மனோன்மணி (48) வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகள் மகாலட்சுமி (வயது 22). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமியின் தாய் மனோன்மணி (48) வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.