செய்திகள்
விஷம்

வேதாரண்யம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-09-17 09:24 GMT   |   Update On 2021-09-17 09:24 GMT
வேதாரண்யம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் பாலமுருகன் (வயது 27) திருமணமாகாதவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்தாராம்.

இந்நிலையில் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பயிர்களுக்கு அளிக்கப்படும் வி‌ஷ மருந்தை எடுத்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து பின்பு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.
Tags:    

Similar News