செய்திகள்
பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூலம் ரூ.139 கோடி வருமானம் - பாராளுமன்றத்தில் ரெயில்வே மந்திரி தகவல்
நாடு முழுவதும் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூலம் ரூ.139 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களையில் நேற்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 2018-19-ம் நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.139.20 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.78.50 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
அதேபோல், 2018-19-ம் நிதி ஆண்டில் விளம்பரங்கள் மற்றும் கடைகள் வாயிலாக ரூ.230.47 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.128.40 கோடியும் ரெயில்வே நிர்வாகம் வருமானம் ஈட்டி உள்ளது’ என்றார்.
பாராளுமன்ற மக்களையில் நேற்று ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் 2018-19-ம் நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.139.20 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.78.50 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
அதேபோல், 2018-19-ம் நிதி ஆண்டில் விளம்பரங்கள் மற்றும் கடைகள் வாயிலாக ரூ.230.47 கோடியும், இந்த நிதி ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.128.40 கோடியும் ரெயில்வே நிர்வாகம் வருமானம் ஈட்டி உள்ளது’ என்றார்.