செய்திகள்
மரணம்

திருப்பத்தூரில் கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி

Published On 2021-03-01 04:04 GMT   |   Update On 2021-03-01 04:04 GMT
திருப்பத்தூரில் கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரகுநாத் மகன் அசோக் (வயது 31). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு வந்து இங்கேயே தங்கி இருந்தார். இவருக்கும், குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழரசி (21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அசோக் குரிசிலாப்பட்டு கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று தனது மச்சான் பிரவீனுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். குளித்துக்கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாததால் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News