செய்திகள்
தேசிய ஓபன் தடகளம் - அன்னு ராணி தங்கம் வென்றார்
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
ராஞ்சி:
59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடைசி நேரத்தில் விலகினார். நல்ல உடல் நிலைக்கு திரும்பிய பிறகு போட்டியில் பங்கேற்கலாம் என்று தனது பயிற்சியாளர் அறிவுறுத்தியதால் போட்டியில் இருந்து விலகியதாக நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அன்னு ராணி 58.60 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டியில் களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடைசி நேரத்தில் விலகினார். நல்ல உடல் நிலைக்கு திரும்பிய பிறகு போட்டியில் பங்கேற்கலாம் என்று தனது பயிற்சியாளர் அறிவுறுத்தியதால் போட்டியில் இருந்து விலகியதாக நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.